சென்னை நகரில் தற்பேோது ஆண்களுக்கு நிகராக பெண் காவலர்கள் போக்குவரத்து காவல் பணியில் உள்ளனர். அவர்கள் சாலைகளில் நீண்ட நேரம் நின்ற படியே பந்தோபஸ்து உள்ளிட்ட காவல் பணிகளில் ஈடுபடும் போது இயற்கை உபாதைகளை கழிப்பதிற்கு கழிப்பறை வசதிகள் இல்லாததால் பெரிதும் சிரமம் மேற்மேற்கெொள்கின்றனர்.
நீண்ட நாட்களாக இந்த பிரச்சினை காவல்துறையில் தீர்க்கப்படாமல் இருந்தது. அதனையடுத்து பெண் காவலர்களின் சிரமத்தை போக்கும் வகையில் பயோ -டாய்லெட் வசதிகள் அமைக்க சென்னை நகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் கமிஷனர் ஆர் சுதாகர், மகளிர் போக்குவரத்து காவலர்களின் நலன் கருதி, ஐந்து முக்கிய சந்திப்புகளில் காவலர்களுக்கு புதிய பயோ-லெட் வசதியை ஏற்படுத்தி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
முதற்கட்டமாக சென்னை உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை சந்திப்பு, விவேகானந்தர் இல்லம், பல்லவன் சந்திப்பு, ஆடம்ஸ் பாயிண்ட் (நேப்பியர் பாலம்) ஆகிய இடங்களில் இந்த பயோ டாய்லட் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய முயற்சியாக அமைகக்கப்பட்டுள்ள இந்த டாய்லட்டுக்களை இன்று (02.03.2024) உழைப்பாளர் சிலை சந்திப்பில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்தார். போக்குவரத்து காவல் கூடுதல் கமிஷனர் ஆர்.சுதாகர் மற்றும் காவல்துறை இணை ஆணையர்கள் போக்குவரத்து, தெற்கு & வடக்கு மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர்களும் கலந்து கொண்டனர். இம்முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியாக இருந்த Chennai Runners-யை கௌரவிக்கும் விதமாக கேடயம் வழங்கப்பட்டது.