­பெங்கல் புயல்: தயார் நிலையில் சென்னை நகர போலீஸ்: கூடுதல் கமி­ஷ­­னர்கள் நேரில் ஆய்­வு

பெங்கல் புயல் கரையைக் கடப்­ப­தை­யொட்டி நாளை சென்னை நக­ருக்கு ரெட் அலர்ட் விடுக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் சென்­னையில் அதி கன­மழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்­துள்­ளது. இத­னை­யொட்டி சென்­னை நகரில் காவல்­து­றையினர் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் மீட்புப் பணிக்கு தயா­ராகி உள்­ளனர்.

பெங்கல் புயலை எதிர் கொள்ளும் வகையில் அதற்­கு­றிய மீட்பு உப­க­ர­ணங்களுடன் சென்னை நகரில் உள்ள காவல் மீட்புப் படை­யினர் அதிகம் சேதம் ஏற்­படும் இடங்­களில் இப்­போதில் இருந்தே பணியில் அமர்த்­­தப்­பட்­டுள்­ள­னர். தென்­சென்­னையில் வெள்ளம் சூழும் பகு­தி­க­ளான வேளச்­சேரி, மடிப்­பாக்கம், எம்ஜிஆர் நகர் ஆகி­ய பகு­தி­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள மீட்பு

பணி­களை தென்­சென்னை கூடுதல் கமி­ஷனர் டாக்டர் என். கண்ணன், இணைக்­க­மி­ஷனர் சிபிச்­சக்­க­ர­வர்த்தி ஆகியோர் இன்று நேரில் பார்­வை­யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வட­சென்னை கூடுதல் கமி­ஷனர் நரேந்­திரன் நாயர் இணைக்­க­மி­ஷனர் டாக்டர் விஜ­ய­குமார் ஆகியோர் நொளம்பூர், மாத­வரம், புளி­யந்­தோப்பு ஆகிய பகுதி­களில் இன்று நேரில் மீட்புப் பணிக­ள் தொடர்­பாக ஆய்வு நடத்­தினர்.

 

Comments (0)
Add Comment