சென்னை நகர காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கமிஷனராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் இன்று 08.07.2024 மதியம் மாற்றப்பட்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டது. அதனையடுத்து அருண் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னை நகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
1998ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருண் 2 ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு 2000ம் ஆண்டு நாங்குநேரி, தூத்துக்குடி ஏஎஸ்பியாக பணியைத் தொடங்கினார். பின்பு எஸ்பியாக பதவி உயர்ந்து 2002ம் ஆண்டு கன்னியாகுமரி மற்றும் கரூர் எஸ்பியாக பணியாற்றினார். மேலும் சென்னை அண்ணாநகர், பரங்கிமலை மற்றும் சிபிசிஐடி எஸ்பி, திருப்பூர், போதைப்பொருள் தடுப்புப்பிரிவுகளில் எஸ்பியாகவும் பணியாற்றினார்.
பின்னர் 2012ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்ந்து டிஜிபி அலுவலக தலைமையிடம், சென்னை நகர சட்டம் ஒழுங்கு இணைக்கமிஷனர், போக்குவரத்து, திருச்சி சரக டிஐஜியாகவும் பணிபுரிந்தார். 2016ஆம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்ந்து திருச்சி நகர போலீஸ் கமிஷனர், சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர், கமிஷனர் அலுவலக நிர்வாகப்பிரிவு ஐஜி, திருச்சி மண்டல ஐஜி மற்றும் போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐஜியாகவும் பணியாற்றினார். பின்னர் 2023ம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிவில் சப்ளைஸ் சிஐடி, ஆவடி போலீஸ் கமிஷனர் அதன் பிறகு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்தார்.