கேரளாவில் காவல்துறை சார்பில் நடந்த இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெங்கலப்பதக்கங்களை வென்று தமிழக காவல்துறை ராஜேஷ்வரி சாதனை படைத்துள்ளார்.
கேரளா மாநில காவல்துறை சார்பில் 1-வது அகில இந்திய காவல் இறகுப்பந்து குழு சாம்பியன்ஷிப் போட்டிகள் 2024-–25 கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள Regional Sports Centre, Rajiv Gandhi Indoor Stadium, Kadavanthra- இம்மாதம் 11.04.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற்றது.
மேலும் மதுரை மாநகர காவல் ஆய்வாளர் ஹேமமாலா இறகுப் பந்து போட்டியில் தனிநபர் பிரிவில் 1-தங்கம், இரட்டையர் பிரிவில் 1-வெள்ளி மற்றும் 1-வெண்கலமும், எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் ஜானகி இறகுப் பந்து போட்டி இரட்டையர் பிரிவில் 1-வெள்ளி மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் 1- வெண்கலமும், , IS-GCP இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மேஜைப் பந்து போட்டியில் 2-வெள்ளியும், திருச்சி லஞ்ச ஒழிப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் இறகுபந்து போட்டியில் 1-வெண்கலமும், சார்பு ஆய்வாளர், மதுரை மாவட்டம் ராமசாமி இறகு பந்து போட்டியில் 1- வெள்ளியும், சென்னை சிபிசிஐடி தலைமைக் காவலர் ஷிஜி அவர்கள் மேஜை பந்து போட்டியில் 1-வெள்ளி மற்றும் 1-வெண்கலமும், ஆவடி மாநகர தலைமைக்காவலர் மைதிலி மேஜைப் பந்து போட்டியில் 1-வெண்கலமும் ஆக மொத்தம் 2-தங்கம், 6- வெள்ளி மற்றும் 4- வெண்கலப் பதக்கங்களும் பெற்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பதக்கங்களை வென்ற தலைமையிட டிஜிபி வினித்தேவ் வாங்கடே, ஐஜி ராஜேஸ்வரி உள்ளிட்டோரை தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கினார்.