தேமு­திக பொதுச்­ செய­லாளர் பிரே­­ம­லதா விஜ­யகாந்த் மீது வழக்­குப்­ப­தி­வு

தேர்தல் நடத்தை விதி­மு­றையை மீறியதாக தேமு­திக பொதுச்­ செய­லாளர் பிரே­­ம­லதா விஜ­யகாந்த் மீது தேர்­தல் பறக்­கும்­படை அதி­கா­ரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசில் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்­ள­து.

நேற்று 18.03.2024 மாலை சென்னை கோயம்­பேட்டில் உள்ள தேமு­திக அலு­வ­ல­கத்தில் பொதுச் செய­லாளர் பிரே­ம­லதா தலை­மை­யில் மகளிர் தின விழா நடந்­தது. இதில் சுமார் 300 பெண்களுக்கு எம்பிராய்டிங் பயிற்சி வகுப்பு இலவச டோக்கன் வழங்கப்­பட்­டது. அப்­போது அந்த பகு­தியில் விரு­கம்­பா­க்கம் சட்­ட­மன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதி­காரி சத்­தி­ய­நா­ரா­யணன் கண்­கா­ணிப்புப் பணியில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்தனர். தேமு­திக அலு­வ­ல­கத்­துக்கு சென்று விசா­ரணை நடத்­தினர். மக­ளி­ருக்கு டோக்கன் வழங்­கு­வது தொடர்­பாக தேமு­திக சார்பில் தேர்தல் கமி­ஷனில் அனு­மதி பெறப்­ப­டாமல் நடத்­தி­யது தெரி­ய­வந்­தது. அது தொடர்­பாக தேர்தல் பறக்கும் படை அதி­கா­ரிகள் சார்பில் கோயம்­பேடு போலீசில் புகார் அளிக்­கப்­­பட்­டது. அதன்­பேரில் போலீசார் தேமு­திக பொதுச் செய­லாளர் பிரே­ம­லதா விஜ­யகாந்த் மற்றும் நிகழ்ச்சி ஏற்­பாட்­டாளர் காளிராஜ் ஆகியோர் மீது 3 பிரி­வு­களின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளனர்.

Comments (0)
Add Comment