3 மாதங்­களில் 40,730 கிலோ புகை­யிலைப் பொருட்கள் பறி­­மு­தல்: 2,997 கடை­க­ளுக்கு சீல்: தமி­ழ­க அம­லாக்­கப்­பி­ரிவு நட­வ­டிக்­கை

கடந்த 3 மாதங்­களில் தமி­ழ­கத்தில் 40,730 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 7.26 கோடி அபராதம் விதித்து 2,997 கடைகளுக்கு சீல் வைத்து தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­துறை நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ள­து.

 

தமி­ழகம் முழு­வதும் அர­சால் தடை செய்­யப்­பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனையைத் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பாக கல்வி நிலையங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட எஸ்­­பிக்­க­ளுக்கும் காவல் ஆணையர்களுக்கும் டிஜிபி சங்­கர்­ஜிவால் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

அம­லாக்­கப்­­பி­ரிவு மற்றும் போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றிவுப்பிரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்­பார்­வையில் ஐஜி செந்­தில்­கு­மாரி தலை­மையில் தமி­ழ­கம் முழு­வதும் போலீசார் தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கின்­ற­னர். அந்த வகையில் கடந்த ஜுன் 2024 முதல் கடந்த 3 மாதங்களில் 40,730 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன, மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக 5,006 வழக்குகள் பிரத்யேகமாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் காவல்துறை அளித்த அறிக்கையின்

அடிப்படையில் உணவுப் பாதுகாப்புத் துறையால் ரூ. 7.26 கோடி அபராதம் விதிக்கப்பட்டு குட்கா விற்­ப­னை செய்­யப்­பட்ட 2,997 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தவிர கல்வி நிலையங்களுக்கு அருகே மணவர்களிடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஒழிக்க காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 391 குழுக்கள் இணைந்து சோதனைகள் நடத்தி வருகின்றன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்களை 10581 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் மூலம் பகிருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள். மேலும் 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அல்லது $pnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பலாம் என அம­லாக்­கப்­பி­ரிவு காவல்­­துறை சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

Comments (0)
Add Comment