குன்றத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற 31 கிலோ கஞ்சாவை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர்.
அப்போது திருமுடிவாக்கம் லாரி ஷெட்டுக்கு சற்று தொலைவில் நின்றிருந்த சந்தேக நபரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பெயர் சுரேஷ் குமார், (42) செங்குன்றம், கக்கன்ஜி தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருடைய உடைமைகளை சோதனை செய்ததில் அதில் ரூ 12 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள, 31 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம், அனந்தபல்லியிலுருந்து கஞ்சாவை வாங்கி வந்து குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கல்லூரி மாணவர்களுக்கும், சில்லறை விற்பனைக்கும் எடுத்துச் செல்வதாக வாக்குமூலம் அளித்தனர். தாம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைப்பொருள் ஒழிப்பு சோதனை தொடர்ந்து நடைபெறும் என தாம்பரம் காவல் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.