9 நாட்­களில் 2,428 போலி மதுபாட்­டில்கள் பறி­மு­தல்: 14 பேர் சுற்­றி­ வ­ளைப்பு: தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு அதி­ரடி நட­வ­டிக்­கை

தமி­ழகம் முழு­வதும் கடந்த 9 நாட்­களில் அம­லாக்­கப்­பி­ரி­வு போலீஸ் நடத்­திய அதி­ரடி ரெய்டில் 2,428 போலி மது­பாட்­டில்­கள் பறி­முதல் செய்­யப்­பட்டு 14 பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

கள்­ளக்­கு­றி­ச்சி விஷ சாராய விவ­கா­ரத்­­துக்குப் பின்னர் தமி­ழகம் முழு­வதும் போலீசார் தீவி­ர­மாக கண்­கா­ணித்து போலி மதுபான விற்­ப­னையை கண்­ட­­றிந்து அவற்றை பறி­முதல் செய்து கடும் நடவ­டிக்­கைகள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். டிஜிபி சங்­கர்­ஜிவால் உத்­த­ரவின் பேரில், தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நேரடி மேற்­பார்­வை­யில் இந்த நட­வ­டிக்­கை மேற்­கொள்­ளப்­பட்­டதன் விளை­வாக கும்­ப­கோ­ணத்தில் கடந்த மாதம் போலி மது­பான ஆலை கண்­ட­றிந்து முடக்­கப்­பட்­டது.

இதன் தொடர்ச்­சி­யாக கடந்த 3ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை அம­லாக்கப்­பி­ரிவு காவல்­து­றை­யினர் நடத்­திய அதிரடி சோ தனை நடத்­தினர். இதில் ஏரா­ள­மான போலி மது­பான பாட்­டில்கள் பறி­முதல் செய்­யப்­பட்­டன. கடந்த 3 ஆம் தேதி­யன்று திருச்சி விமான நிலையம் பகு­தியைச் சேர்ந்த முருகன் (எ) முருகவேல் என்ற வர­லாற்­றுப்­ப­தி­வேடு ரவு­டியிட­மி­ரு­ந்து திருச்சி மண்­டல மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமன் தலை­மை­யி­லான தனிப்­ப­டை­யினர் 644 (750 மிலி) போலி மதுபானபாட்டில்களை பறி­முதல் செய்­த­னர். ­மு­ருகன் பெங்களுரிலிருந்து போலி மதுபானபாட்டில்கள் பிளாஸ்டிக் டிரமில் அடைத்து வைத்து Pon Pure Logistics மூலமாக திருச்சி கொண்டு வந்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளது தெரி­யவந்­த­து.

மேலும் 5ஆம் தேதி­யன்று விருதுநகர் -அருப்புகோட்டை ரோடு, பெரியவள்ளிகுளம், லட்சுமிபதி நகரில் வீரராஜ் என்­ப­வ­ரது வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்­பட்­டிருந்த 264 (750 மிலி) போலி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகரம், வண்ணாரபேட்டை, கம்பராமாயணம் தெருவில் உள்ள வீட்டை சோதனை செய்ததில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,026 (750 மிலி) போலி மதுபானபாட்டில்கள் சிக்­கி­ன விசாரணையில் கோவாவில் குடியேறிய தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த மாரிராஜன் என்பவர் கர்நாடக மாநிலத்திலிருந்து போலி மதுபானபாட்டில்களை ஏற்பாடு செய்தவர் என்று தெரி­ய­வந்­த­து. அதன் பேரில் அம­லாக்­கப்­பி­ரிவு போலீசார் பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த கேசவமூர்த்தி (50) என்பவரை கைது செய்தனர்.

போலி மதுபானம் பதுக்கிவைத்திருந்த குடோன் கண்டறியப்பட்டது. மேலும் அங்கிருந்து போலி மதுபானங்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டு”for defence service only”என்ற முத்திரை போடப்பட்டு பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைத்து அடைக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாரிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். மேலும் பெங்களுரிலிருந்து கடத்தப்படும் போலி மதுபானபாட்டில்கள் ABT Parcel service மற்றும ‘Pon Pure Logistics மூலமாகதான் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலின் அடைப்படையில் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்ய கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சங்கரன்கோயில், மார்த்தாண்டம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைகளில் குற்­ற­வா­ளிகள் கைது செய்யப்பட்டு, போலி மதுபானபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

இதே போல கிருஷ்ணகிரி, திண்­டுக்கல், சங்­கரன்­கோவில், மார்த்­தாண்டம் ஆகிய பகு­தி­களில் போலி மது­பாட்­டில்­களை விற்­பனை செய்து வந்த முனியப்பன், முருகன், ஷேக் அப்துல்லா, சங்கரன்கோயில், செல்வராஜ் உள்­ளிட்டோர் கைது செய்­யப்­பட்­ட­னர். இதில் முக்கிய குற்றவாளியான மாரிராஜன் என்பவரை மத்திய நுண்ணறிவு பிரிவு, திருச்சி மண்டல தனிப்படை குழுவினர் கோவா மாநிலத்தில் பிடித்து, திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் ஒப்படைத்தனர். மாரிராஜன் என்பவரை விசாரனை செய்த பின்னர் 10.09.2024 அன்று சிறையில் அடைத்தனர்.

மாரிராஜன் என்பவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து 2000ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர் என்பதும், இவர் மேல் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சரித்திர பதிவேடு 2014 முதல் உள்ளது என்பது விசாரணையில் தெரியவருகிறது. மேலும் இத்தொடர் நடவடிக்கையில் 14 குற்றவாளிகள் EBCID குழுவினர் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் கடந்த 9 நாட்­களில் அம­லாக்­கப்­பி­­ரிவு போலீசார் நடத்­திய அதி­ரடி நட­வ­டி­க்­கையில் மொத்தம் 2,428 போலி மது­பாட்­டில்கள் பறி­முதல் செய்­யப்­பட்டு 14 பேர் கைது செய்யப்­பட்­டனர். அதி­ரடி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட கூடுதல் டிஜிபி அமல்ராஜ் மேற்­பார்­வையில், ஐஜி மயில்­வா­கனன், எஸ்பி சியா­மளா தேவி தலைமையிலான தனிப்­ப­டை­யினர் இன்ஸ்­­பெ­க்டர்­கள் ராமன், இளங்கோ, சரவணகுமார் ஆகியோரை டிஜிபி சங்­கர்­ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

 

Comments (0)
Add Comment