கடந்த 7 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், சென்னை நகரில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர். 78.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 71.4 கிலோ மாவா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 26.02.2024 முதல் 03.03.2024 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 78.2 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 71.4 கிலோ மாவா, 1 செல்போன், பணம் ரூ.13,900/-, 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 03.03.2024 வரை, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா புகையிலை பொருட்கள் வழக்குகளில் கைது செய்யப்பட்ட 14 குற்றவாளிகள் காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.