சோழவரத்தில் பைக் ரேசில் ஈடுபட்ட மூவர் கைது

ஆவடி காவல் ஆணையரகம், வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் குழு ஒன்றை அமைத்து பைக் ரேஸ் நடைபெறாமல் கண்காணிக்க உத்தரவிட்டருந்தார்.

இதன் அடிப்படையில் அருமந்தை சோழவரம் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் அதிரடியாக சோதனை செய்து பைக் ரேசில் ஈடுபட்ட செங்குன்றம் நாரவாரி குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு, 19, புழல் லெனின் ஜான்சன்

(எ) பில்லர், 18 திருவள்ளூர் தினேஷ், 21 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து பைக் ரேசிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ஓட்டுநர் உரிமம் மற்றும் Video எடுக்க பயன்படுத்திய கைப்பேசிகள் ஆகியவற்றை கைப்பற்றி எதிரிகளை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Comments (0)
Add Comment