திரு­வி­லாங்­கோட்டில் மறைந்து கோவையில் எழுந்த ­ஹஜ்ரத் ஜமேஷா அவ்­லியாவின் அதிசய வர­லா­று

அவ்­­­லி­யாக்­களின் தரி­சனம் பெற்றால் ஆன்­மா­வுக்கே சுகம், சுகம். எவ­ருக்கும் இதிலே சந்­தேகம் வேண்டாம். ஏற்றுக் கொண்­டோ­ருக்­கே ஜெயம், ஜெயம்…

இவ்­வு­லகில் வாழ்கின்ற, வாழ்ந்து விட்­டுச் சென்ற அல்­லாஹ்வின் நேசம் பெற்ற எண்­ணற்ற வலி­மார்­கள் நிகழ்த்திச் சென்ற, நிகழ்த்திக் கொண்­டி­ருக்­கிற அதி­ச­யங்கள், ஆச்­சர்­யங்கள் அதனை உணர்ந்­த­வர்­க­ளுக்­குத்தான் புரி­யும். பாக்­தாத்தில் உல­க வலி­மார்­க­ளின் தலை­வ­ரான முஹ்­­யித்தீன் அப்­துல் காதிர் ஜீலானி ரழி­யல்லாஹ் அன்ஹு என்­கிற ஹவ்ஸ் நாயகம் ­அ­வர்கள் தொடங்­கி, வடக்கில் அஜ்மீர் க்வாஜா முயி­னுத்தீன் சிஸ்தி ரழி­யல்லாஹ் அன்ஹு அவர்கள், தென்­ன­கத்தில் நாகூர் ஆண்­ட­கை பாதுஷா நாய­கம் தொட்டு, ஏர்­வாடி இபு­றாஹிம் பாதுஷா மற்றும் தக்­கலை பீர் முகம்­மது அப்பா வரை தமி­ழ­கத்தில் பல்வேறு நூற்றுக்கணக்கான இறை நேசர்­களின் ஆன்­மிக அர­சாட்­சிக்கு எல்­லை இல்லை.

முஹ்­யித்தீன் வாப்பா

அந்த வழியில் கன்­னி­யா­கு­மரி மாவட்டம் திரு­வி­லாங்­கோட்டில் பிறந்து, அல்­லா­ஹ்வின் அருளைப் பெற்று அள­விலா அரு­ளுடன் விளங்­கிய இறை­நேசர் மக்­க­ட்டி லெப்பை என்­கிற ஜமே­ஷா அவ்­லி­யா ரழி­யல்லாஹ் அன்ஹு அவர்­களின் இறை நேச வாழ்க்கை கேட்கும் போது பிர­மிக்க வைக்­கி­றது. அது தொடர்­பாக நெல்லை, மேலப்­பா­ளை­யம் அதி­சய சக்தி என அழைக்­கப்­படும் புறாக்­கார லெப்பை 94 வயதை எட்­டிய முஹ்­யித்தீன் வாப்பா சொன்ன விஷ­யங்கள் மெய்­சி­லிர்­க்க வைத்­தது.

”மக்­கட்டி லெப்பை திரு­வி­லாங்­கோட்டில் பிறந்து, வளர்ந்து சிறந்த தவஞானி­யாக இறை­நே­ச­ராக வாழ்ந்தவர். அவர் வாழ்ந்­தது 1950ம் ஆண்­டு­களில் என கூறப்­ப­டு­கி­றது. மக்­கட்டி லெப்பை திரு­வி­லாங்­கோடு மக்­க­ளுக்கு பல அதி­ச­யங்­களை நிகழ்­த்திக் காட்டி­யவர். செய்­வினை, சூனியம், ஏவல், பில்லி, பேய் பிசா­சு­களால், நோய் நொடியால் அவ­திப்­பட்டு வந்த மக்­க­ளுக்கு அல்­லாஹ்வின் திரு­நா­மங்­களை ஜெபித்து தனது தவ வலி­மையால் தண்ணீர் ஓதிக் கொடுத்து அவற்றை நீக்­கி­ அதிச­யங்­களை நடத்திக் காட்­டி­யுள்­ளார்.

அதற்­காக மக்­கட்டி லெப்பை யாரி­டமும் எந்த கை மாறும் பெற்­றது இல்­லை. அதற்கு மாறாக இறை ரக­சி­யங்கள் குறித்து போத­னை­களை மக்­க­ளுக்கு புரியும் வகையில் ஆன்­மிக சிந்­த­னை­களை புகுத்­தி­னார். மக்­கட்டி லெப்பை திரு­வி­லாங்­கோட்­டடில் உள்ள டீக்கடைக்குச் சென்றால் அவர் குடித்த டம்­ளரில், டீயை ஊற்றிக் குடிக்க பெரிய மக்கள் கூட்டம் அங்கு வெள்ளம் போல கூடி நிற்பார்கள். மக்­கட்டி லெப்பை அருந்­திய டீ டம்­ளரில் குடித்தால் அந்த மனி­த­ருக்கு உடம்பில் தொற்­றி­யுள்ள கெட்ட சக்­தி­களின் தாக்கம் விலகியுள்­ளது. நோய் நொடிகள் தீர்ந்­துள்­ளது என்­பதால் மக்கட்டி லெப்பை டீ குடித்த டம்­ள­­ருக்கு அத்­தனை மகிமை என்­பார்கள்.

இன்னும் எண்­ண­ற்ற சக்தி­களை தன்னுள் அடக்கி வைத்­துள்ள மக்­கட்டி லெப்­பையின் உண்­மை­யான பெயர் ஜமேஷா அவ்­லியா என்­பது யாரும் அறி­யா­தது. திரு­வி­லாங்­கோட்டில் பிறந்து அல்­லாஹ்வின் பொக்­கிஷங்­களை தனது ஆன்மிக போதனை மூலமும், அதிசய செயல் ­ பா­டுகள் மூலமும் வெளிக்­காட்­டிய மக்­கட்டி லெப்பை திடீ­ரென திரு­வி­லாங்­­கோட்டில் தான் வாழ்ந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டார். கூடு விட்டு கூடு பாயும் சக்­தி கொண்ட மக்­க­ட்டி லெப்பை பின்னர் கோவையில் தோன்றி வாழ்ந்தார் என கூறப்­ப­டு­கி­றது. கோவை டவுன் ஹால் பகு­தியில் வாழ்ந்து அங்­கேயே ஜீவ சமா­தி­யா­னார்.

அவ­ரது புனித அடக்­க­த்­தலமான ஹஜ்ரத் ஜமேஷா அவ்­லியா தர்கா கோவை சிட்டி, டவுன் ஹாலில், பிர­­கா­ச­புரம் பகு­தியில் உள்­ளது. அவ­ரது உயரம் சுமார் 4 அடி மட்­டுமே. குள்­ள­மான உருவம் கொண்ட அவ­ரது அடக்­க­த் தலத்­­தின் நீளத்தை பார்த்­தாலே இது தெரி­ய­வரும். உலகில் வாழ்ந்த பெரு­ம்­பான்­­மை­யான வலி­மார்­களின் உயரம் மிகச் சிறிய அள­வுதான் என்­பதை வர­லாற்று நூல்­களில் பார்த்தால் அறிந்து கொள்­ள­லாம். கோவையில் உள்ள ஜமேஷா அவ்­லியா தர்­கா­வுக்கு ­வியா­ழன் இரவு மற்றும் அமா­வாசை, பவுர்­ணமி தின­த்தில் சென்று தங்கள் நாட்ட தேட்­டங்­களை கேட்டால் அது நிறை­வே­று­கி­றது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலை­மோ­து­கி­றது. இறை நேசர்­க­ளுக்கு என்றும் அழிவில்­லை.அ­வர்கள் இன்­றும் இவ்­வு­லகில் வாழ்ந்து கொண்டு மக்­க­ளுக்கு இறை தொண்­டு செய்­கின்­றனர் என்­ப­துதான் மறுக்க முடி­யாத உண்­மை” என்றார் முஹ்­யித்தீன் வாப்பா.

தொடர்பு 96775 66413

Comments (0)
Add Comment