புறம்­போக்கு இடத்தை ரூ. 1.50 கோடிக்கு விற்று மோசடி செய்­த சகோ­த­ரிகள் கைது * சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீ­சார் நட­வ­டிக்­கை

பூர்விக இடம் எனக்கூறி புறம்போக்கு இடத்தை விற்பனை செய்து ரூ.1.50 கோடி பணத்தை பெற்று ஏமாற்றிய சகோதரிகள் இருவரை சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீ­சார் கைது செய்­த­னர்.

 

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருபவர் சுப்ரமணியம். இவ­ரிடம் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சகோ­த­ரிகள் சாமூண்டீஸ்வரி, சந்திரா, முனுசாமி என்ற தங்கம் ஆகியோர் தங்களுக்கு சென்னை, அமைந்தகரை, வில்லிவாக்கம் கிராமத்தில் 9,108 சதுரடி இடம் உள்ளதா­கவும் அதனை தங்­க­ளது பூர்­விக சொத்து என கூறி விற்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ள­னர். அந்த இடத்­துக்கு கிரைய ஒப்பந்தம் செய்து கொடுத்து ரூ.1.50 கோடி பணத்தை பெற்று கொண்டு சுப்­பி­ர­ம­ணியை ஏமாற்­றி­யுள்னர். இது தொடர்­பாக சுப்­பி­ர­மணி சென்னை போலீஸ் கமி­ஷனர் அருணிடம் புகார் அளித்­தார்.

கமிஷனர் அருண் உத்­த­ர­வின் பேரில் சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கூடுதல் கமி­ஷனர் ராதிகா மேற்­பார்­வை­யில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு (EDF-II) உதவி ஆணையாளர் பெனாசிர் பாத்திமா தலைமையில், EDF-II, Beta_IV காவல் ஆய்வாளர் பிரபா மற்றும் தனிப்படையினர் விசா­ரணை நடத்­தினர். இதில் சுப்­பி­ர­ம­ணி­யிடம் நில மோசடி நடந்­தது உண்மை என தெரி­ய­வந்­தது. அத­னை­ய­டுத்து தனிப்­படை போலீசார் சாமூண்டீஸ்வரி (45), சந்திரா (40) ஆகிய இரு­வரை இன்று (13.03.2025) கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் சென்னை, எழும்பூர் சிறப்பு நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரு­வ­ரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கின் தலைமறைவு எதிரி தங்­கத்தை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Comments (0)
Add Comment