2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜ.,வுக்கு எம்ஜிஆர் மக்கள் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக எம்ஜிஆர் மக்கள் மன்றத்தின் தலைவர் கே. புகழேந்தி விடுத்துள்ள அறிக்கையில்,
”வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் எங்கள் அமைப்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாக செயற்குழு இன்று கூடி முடிவு செய்துள்ளது. பாரத தேசத்தில் ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்று 2024 தேர்தலில் ஒலிக்க எங்களுடைய ஆதரவை அளிக்கிறோம். எங்களுடைய நிர்வாகிகள் அனைவரும் எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு அரசியலில் மக்கள் பணி ஆற்றியவர்கள். ஆகவே அ.இ.அ.தி.மு.க ஓட்டுகளை நம் அணிக்கு மாற்ற வேலை செய்வார்கள். பாஜ., கூட்டணி தமிழ்நாட்டில் 40/40 வெற்றி பெற பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.