சென்னை பள்ளிக்கரணை ஆணவக் கொலையில் ஈடுபட்டு கைதான 6 பேர் கும்பல்: அதிரடி காட்டிய தாம்பரம் காவல் ஆணையரகம்

தாம்பரம் மாநகர காவல் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சேலையூர் சரகம் பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் நேற்று 24.02.2024 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையில் அமைந்துள்ள ஜாலி பே பார் அருகே பிரவீன் (-26) என்பவரை ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். தகவல் கிடைத்ததும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று காயம் அடைந்த பிரவீனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணை செய்ததில் பிரவீன் பள்ளிக்கரணை சாய் கணேஷ் நகரை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த நவம்பர் மாதம் காதலித்து பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண்ணின் அண்ணன் தினேஷ் முன்விரோதம் கொண்டு அவனது கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து பிரவீனை கொலை செய்ய திட்டமிட்டு தாக்கியது தெரிய வந்துள்ளது. பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் காயமடைந்த பிரவீன் அரசு குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

அதனையடுத்து கெொலை முயற்சி வழக்கை கெொலை வழக்காக மாற்றி பேோலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்த பிரவீன் மீது 2022-ம் வருடம் ஒரு கொலை வழக்கு உள்ளது. இது தெொடர்பாக தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சேலையூர் உதவிக்கமிஷனர் தலைமையில் கெொலையாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தனிப்படை போலீசார் வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியைச் சேர்ந்த அசேோக் (32), ஜல்லடையான் பேட்டை தினேஷ் என்கிற குட்டி (24), சிட்லபாக்கம் விஷ்ணுராஜ் (25), சித்தாலப்பாக்கம் ஸ்டீபன் குமார் (26), பள்ளிக்கரணை ஜேோதிலிங்கம் (23), ஸ்ரீராம் (18) ஆகிய 6 பேரை இன்று காலை மாம்பாக்கம் அருகே வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர். பள்ளிக்கரணையில் ஆணவக் கெொலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment