ரூ. 5 கோடி மதிப்­பி­லான போதைப்­பொ­ருட்கள் தீயி­லிட்டு அழிப்பு: தமி­ழக அம­லாக்­கப்­பி­ரிவு காவல்துறை­யினர் நட­வ­டிக்­கை

தமி­ழகம் முழு­வதும் போதைப்­பொருள் தடுப்பு நுண்­ண­றிவுப் பிரிவு காவல்­து­றை­யி­னரால் மீட்­கப்­பட்ட ரூ. 5 கோடி மதிப்­புள்ள போதைப்­பொ­ருட்கள் இன்று தீயி­லிட்டு எரி­த்து அழிக்­­கப்­பட்­டன.

போதை­யில்லா தமி­ழகம் என்ற தமிழக முதல்வர் ஸ்டா­லினின் திட்­டத்தின் படி தமி­ழக அம­லா­க்கம் மற்றும் குற்­றப் புல­னாய்வு பிரிவு காவல்­து­றை­யினர் அதி­ரடி ரெய்­டுகள் நடத்தி போதைக்­க­டத்தல் ஒழிப்பில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அம­லாக்­கப் பணி­ய­க கூடுதல் டிஜிபி அமல்ராஜ் உத்­த­ரவின் பேரில், ஐஜி செந்­தில்­கு­மாரி தலை­மையில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதன் தொடர்ச்­சி­யாக மாநிலம் முழுவதும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போ­லீசாரால் 428 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதைப்­பொ­ருட்கள் இன்று நீதி­மன்றம் உத்­த­ரவின் பேரில் செங்­கல்­பட்டு தென்மேல் பாக்­கத்தில் உள்ள எரி­யூட்டு நிலையத்தில் தீயில் போடப்­பட்டு அழிக்­கப்­பட்­டன. மொத்தம் 4,727.971 கிலோ கஞ்சா, 0.72 கி.கி ஹெராயின் மற்றும் 1.5 கி.கி ஹாசிஸ் உள்ளிட்ட மொத்தம் ரூ. 5 கோடி மதிப்பிலான போதை பொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது. அம­லாக்கம், குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு ஐஜி செந்­தில்­கு­மாரி தலை­மையில் மற்றும் தடய அறி­வியல் துறை துணை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கஞ்சாவை தீயிலிட்டு அழித்­த­னர்.

இந்த ஆண்டு இதுவரை, 1,742 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 26,329.727 கிலோ உலர் கஞ்சா, 77.67 கிலோ ஹாஷிஷ் ஆயில், 103.85 கிலோ சாரஸ், 1.862 கிலோ ஹெராயின், 245.6 கிலோ கஞ்சா சாக்லேட், 1.61 கிலோ மெத்தாம்பிட்டமைன் உள்ளிட்ட 27 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை போதை பொருள் நுண்ணறிவு பிரிவினரால் எரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள், போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments (0)
Add Comment