தமிழகத்தின் வடக்கு மண்டலமான விழுப்புரம் டிஐஜி சரகத்துக்குட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் விழுப்புரம் காவல் சரகம் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் 20.12.2024 மற்றும் 21.12.2024 ஆம் தேதிகளில் நடைபெற்றது. குற்றங்களைக் கண்டறிதல் மற்றும் சட்ட அமலாக்கத்தில் முன்மாதிரியான செயல்திறனைப் பாராட்டி, விழுப்புரம் சரகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெச்சத் தகுந்த பணிகளை செய்த திருக்கோவிலூர் சப்டிவிஷன் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், உதவி ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், பிரபாகரன், லோகேஸ்வரன், மணிபாரதி, சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவல் ஆளிநர்கள் மணிகண்ட பெருமாள், அசோக் குமார், சிவபாலன், விக்ரம் வாசு ராமதாஸ், பிரபாகரன், சுரேஷ், பிரபு உள்பட 15 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் மெச்சதகுந்த பணிகளை பாராட்டி நற் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல், கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதி, கடலூர் எஸ்பி ராஜாராம், விழுப்புரம் எஸ்பி தீபக் ஸ்வாச் ஆகியோர் உடன் இருந்தனர்.