ஆவடி காவல் ஆணைரயகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 64 புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.
இன்று 02.07.2025ம் தேதி ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் கமிஷனர் சங்கர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 64 புகார் மனுக்களை உரிய அதிகாரிகள் மூலமாக உடனடியாக தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இந்த குறைதீர்ப்பு முகாமில் ஆவடி துணைக்கமிஷனர் அய்மன் ஜமால் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
மேலும் இதற்கு முன்பாக பெறப்பட்டு விசாரணை முடிக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது மேற்கொண்ட விசாரணை குறித்து மனுதாரர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, சரியான தீர்வு காணப்படாத மனுக்கள் மீதும், மறுவிசாரணை செய்ய கோரிய புகார் மனுக்களின் மீதும் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மேல் விசாரணை மேற்கொள்ள கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார்.