சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர்.
இதே போல, இன்று (01.09.2023) காலை 10.00 மணி முதல் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள பூக்கடை காவல் மாவட்டத்தில் கொண்டித்தோப்பு காவலர் சமுதாய நலக்கூடத்திலும், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் தண்டையார்பேட்டை சமுதாயநலக்கூடம், புது வண்ணாரப்பேட்டை சமுதாயநலக்கூடம், புது சூரங்குடி திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது.
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் குருச்சந்திரா திருமண மண்டபத்திலும், அண்ணாநகரில் நடுவங்கரை திருமண மண்டபத்திலும், கொளத்தூர் காவல் மாவட்டத்தில் பெரவள்ளூர் காவல் நிலைய வளாகத்திலும், கோயம்பேடு மாவட்டத்தில் சீதாலட்சுமி மண்பத்திலும், திருவல்லிக்கேணி மாவட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையாளர் அலுவலகத்திலும், கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில்வேப்பேரி லட்சுமிமஹாலிலும், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் எம்.ஆர்சி நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்திலும், அடையார் மாவட்டத்தில் J-2 அடையார் காவல் நிலைய வளாகத்திலும், பொதுமக்கள் குறை தீர் முகாம்கள் நடந்தன.
மேலும் திநகர் துணை ஆணையாளர் அலுவலகத்திலும், தி.நகர் பர்கிட் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஹால் திருமண மண்டபத்திலும், மற்றும் புனித தோமையர் மலை காவல் மாவட்டத்தில் ஆலந்தூரில் உள்ள JM ஹால் திருமண மண்டபத்திலும் என 12 காவல் மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில் பொதுமக்கள் மெகா குறை தீர் முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. குறைதீர் முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதியும் தேநீர் மற்றும் ஸ்நக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.