சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பாக பணிபுரிந்த மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், தலைமைக்காவலர்கள் சிவகுமார், சிவலிங்கம், விஜயராம், முதல் நிலைக்காவலர்கள் மணிவண்ணன், யுவராஜ் மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர் குமார், முதல் நிலைக் காவலர்கள் மணிகண்டன், சீனிவாசகன், காவலர்கள் அப்பு, சக்திவேல், அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு
காவல் உதவி ஆய்வாளர் பத்மநாபன், தலைமைக் காவலர்கள் முத்துசாமி, அருண்குமார், முதல் நிலைக்காவலர் செந்தில்குமார் ஆயிரம் விளக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாசம், கைவிரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் வினோத், தலைமைக் காவலர் தேவராஜன், முதல் நிலைக்காவலர்கள் தங்கப்பாண்டியன், சரவணன், பாண்டியன், ராஜ்குமார், நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் பிரிவு தலைமைக்காவலர் இளையராஜா 2 காவல் ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 18 காவல் ஆளிநர்கள் என 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
M-1 மாதவரம் காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்தும், மதுரவாயல் காவல் குழுவினர் கார் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளை கைது செய்து காரை மீட்டும், அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் வாகன விபத்து வழக்கில் தொடர்புயை குற்றவாளியை கைது செய்தும், நுங்கம்பாக்கம் காவல் குழுவினர் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து 16 1/2 சவரன் தங்க நகைகளை மீட்டும், நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர் அண்ணா ரோட்டரி சந்திப்பு அருகே முக்கிய பிரமுகர் செல்லும் வழியில் அனுமதியில்லாமல் சாலையை தோண்டிய நபர்களை எச்சரித்து பணியை நிறுத்தியும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.