சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 41 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் அருண் உத்தரவிட்டார். நேற்று (04.06.2025) புதன்கிழமை காவல் ஆணையரகத்தில் புகார் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து 41 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி மற்றும் துணை ஆணையாளர் (நிர்வாகம்) சுப்புலட்சுமி ஆகியோர் உடன் இருந்தார்.