பா.ஜ.கவின் தேர்தல் நன்கொடை பத்திர முறைகேட்டால் உலக அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத்தின் வழி பணக்குவியலை அள்ளியிருக்கும் மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் பணியாற்ற விடாமல் தடுக்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே ஆபத்தானது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.