பாஜக பிர­முகர் வேலூர் இப்ராஹிம் மகன் கஞ்சா வழக்கில் கைது

சென்னை, திருமங்கலம் பகுதியில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிர­முகர் இப்­ரா­­ஹிமின் மகன் உள்­பட இரு­வரை போலீசார் கைது செய்­த­னர்.
சென்னை நகரில் போலீ­ஸ் கமி­ஷனர் அருண் உத்­த­ரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு  மற்றும் 12 காவல் மாவட்ட காவல் அதிகாரிகள் குழுவினர் நான்கு மண்டல காவல் இணை ஆணையாளர்கள் மேற்­பார்­வையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து முழுவதுமாக கட்டுப்படுத்திட பல்வேறு தொடர் நடவடிக்கைகள்  எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை திருமங்கலம் இன்ஸ்­பெக்­ட­ருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்­ப­டை­யினர் நேற்று (06.10.2025) காலை  திருமங்கலம், பாடிக்குப்பம் மெயின் ரோடு, காமராஜர் தெரு சந்திப்பு அருகே கண்­கா­ணித்­தனர். அப்­போது அங்கே சந்தேகப்படும்படி நின்றிருந்த காரில் இருந்த நபர்கள் போலீசை கண்­டதும் தப்­பி­யோட முயன்­றனர். அவர்­களை பிடித்து சோதனை செய்தபோது, கொக்கைன் வகை போதைப்பொருள், கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் கூலிப் பாக்கெட்டுகள் வைத்திருந்தனர். விசார­ணையில் அவர்கள் சென்னை செங்­குன்­றத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (21), ரசீத் அலி (25) என்­பதும், அப்துல் ரகுமான் வேலூர் பாஜக பிர­முகர் இப்­ரா­­ஹிம் என்­ப­வ­ர­துமகன் என்­பது தெரி­ய­வந்­தது.
அவர்களிடமிருந்து 7 கிராம் கொக்கைன் வகை போதைப்பொருள், 20 கிராம் கஞ்சா, கூலிப் பாக்கெட்டுகள்-21, 4 செல்போன்கள், கையடக்க கஞ்சா அறவை இயந்திரம், கையடக்க எடை இயந்திரம், 1 கைக்கடிகாரம், கஞ்சா புகைக்க பயன்படுத்தும் கண்ணாடி குடுவை, STASH PRO பேப்பர் 4 பாக்கெட்டுகள், மற்றும் ஸ்கார்பியோ கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 2 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் இன்று (06.10.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­ட­னர்.
Comments (0)
Add Comment