கடந்த 26.01.2026 அன்று சென்னை அடையார், இந்திரா நகர், 1 ஆவது அவென்யூ சாலையில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்தபடி கிடந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சியந்த அந்த பகுதி மக்கள் உடனே அடையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் கொலையுண்டு கிடப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் கொலையுண்ட இளைஞரின் உடலை கைப்பற்
இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் கொலை செய்யப்பட்ட இளைஞர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரில் குறித்து வைத்திருந்த சில செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரியவந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில் கொலையான இளைஞர் பெயர் கவுரவ் குமார் (24) என்பதும் இவர் தன் மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை அப்படி தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்ததது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்து விசாரணையில் தெரியவந்துள்ளது. கௌரவ் குமார் நெருங்கிய நண்பர் உள்பட 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையும் காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து மனைவி மற்றும் குழந்தையின் சடலத்தை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுட்டுள்ளனர். அடையாறு கெனால் ரோடு, கூவம் ஆற்றுயோரம், பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளிலும் அடையாறு முகத்துவாரம் பகுதிகளில் போலீசார் தீவிரமாக தேடினர். குழந்தையின் சடலம் அடையாறு மத்திய கைலாஷ் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கவுரவ் கொலை வழக்கு தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திர நாத் தாகூர், பிகாஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.