அசத்தும் கரூர் மாவட்ட காவல்­து­றை: 3 நாட்களில் 4 வழக்குகளில் 7 குற்­ற­வா­ளி­க­ளுக்கு கடும் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

கரூர் மாவட்­டத்தில் போக்சோ உள்­ளிட்ட குற்­றங்­களில் ஈடு­பட்ட 7 பேருக்கு நீதி­மன்­றத்தில் 3 நாட்­களில் 4 வழக்­கு­களில் கடும் தண்­டனை பெற்­றுத்­தந்து காவல்­து­றை­யினர் சாதனை படைத்­துள்­ள­னர்.

வெங்­க­மேடு கொலை வழக்­கில் 4 பேருக்கு ஆயுள்

11.07.2019 அன்று கரூர் மாவட்­டம், வெங்கமேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் தொடர்புடைய குற்­ற­வா­ளி­கள் வெண்ணை­ம­லையைச் சேர்ந்த மனோ @ மனோரஞ்சித், (26), ஸ்ரீதர், (30), திருச்சி ரயில் நகர் நிக்சன், (30), மணிகண்டன் என்கி­ற பேட்டரி பாலாஜி, (௩௫) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கண்ட வழக்கு கரூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்­தது. இத­னைத் தொடர்ந்து 04.03.2026 அன்று இந்த வழக்கில் மேற்­கண்ட 4 எதிரிகளுக்கு ஆயள் தண்டனை விதித்து நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. அத­னை­ய­டுத்து அவர்­கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போக்சோ குற்­ற­வா­ளிக்கு 7 ஆண்டு கடுங்­கா­வல்

கடந்த 2025 ஆம் ஆண்டு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் (POCSO) 11.06.2025 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளி முருகானந்தம் (46), என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கின் விசாரணை கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 04.03.2026 ஆம் தேதி வழக்கின் எதிரிக்கு 7 ஆண்­டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்­ப­ளித்­தது. அத­னை­ய­டுத்து குற்­ற­னா­ளி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மற்­றொரு குற்­ற­வா­ளிக்கு 20 ஆண்டு ஜெயில்

2025 ஆம் வருடம் கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 18.06.2025 அன்று போக்சோ பாலியல் வன்கொடுமை சட்டம் (POCSO) பிரிவின் கீழ் வழக்கு தொட­ரப்­பட்­டது. இதில் தொடர்­புடைய குற்றவாளி கரூர், புளி­யம்­பட்­டியைச் சேர்ந்த மகேந்திரன் (38) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி வழக்கானது கரூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 05.03.2026 ஆம் தேதி எதிரிக்கு 20 ஆண்­டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இரட்டைக் கொலை­யா­ளிக்கு இரட்டை ஆயுள்

மேலும் 2024 ஆம் வருடம் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் 09.11.2024-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி தென்­­கா­சியைச் சேர்ந்­த செல்வகணேஷ் (48) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்­பட்டார். இந்த வழக்கானது கரூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 06.03.2026 ஆம் தேதி மேலே கண்ட எதிரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

எஸ்பி பாராட்­டு

மேற்கண்ட வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவாக கைது செய்தும், இறுதி அறிக்கை தயார் செய்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் சிறை தண்டனை பெற திறம்பட புலன்விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகளை கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா வெகு­வாக பாராட்டினார்.

Comments (0)
Add Comment