சென்னை, அயனாவரம் பகுதியில் குட்கா விற்பனை செய்த 2 நபர்களை போலீசார் கைது செய்து 24.35 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.
அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 18.03.2025 அன்று காலை, அயனாவரம், சபாபதி தெருவில் ரகசியமாக கண்காணித்தனர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்த ராம்பாபு (39) என்பவரை கைது செய்தனர். ராம்பாபு அளித்த தகவலின்பேரில், அவருக்கு குட்கா புகையிலை பாக்கெட்டுகளை விநியோகம் செய்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் (50) என்பவரையும் மடக்கிப் பிடித்தனர். இருவரிடமிருந்தும் மொத்தம் 24.35 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், V1, விமல், கூலிப் ஆகிய குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.