திருச்சியில் 2024 முதல்வர் கோப்பைக்கான மெகா ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் துணைத் தலைவரும், மாநில ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவமான முன்னாள் போலீஸ் ஐஜி ராமசுப்பிரமணி, ஐபிஎஸ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
திருச்சியில் 2024ஆம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான ஹேண்ட்பால் போட்டி கடந்த 6.10.2024 தொடங்கி 15.10.2024 வரை நடந்தது. எஸ்டிஏடி அதிகாரிகளுடன், மாநில ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவரும் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவரும், தமிழக காவல்துறை முன்னாள் போலீஸ் ஐஜியுமான ராமசுப்பிரமணி மற்றும் மாநில செயலாளர் சிவகுமார், திருச்சி அண்ணாவி ஆகியோர் இணைந்து தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு 10 நாட்கள் நடத்தப்பட்ட இந்த மெகா விளையாட்டுப் போட்டியில் ரொக்கப் பரிசுத் தொகையாக ரூ. 10.5 லட்சம், ரூ. 7 லட்சம், மற்றும் ரூ. 3.5 லட்சம் என ஒவ்வொரு அணிக்கும் (14 வீரர்கள்) முறையே 1, 2 மற்றும் 3வது இடங்களுக்கு வழங்கபட்டது. மேலும் நான்கு பிரிவுகளுக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ. 84 லட்சம் ஆகும்.
மாணவ, மாணவிகளை சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நடந்த இந்தப் போட்டியை அமைச்சர் கே.என். நேரு துவங்கி வைத்தார். மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஒருங்கிணைப்புடன் 160 போட்டிகள் நடத்தி வெற்றிகள் தீர்மானிக்கபட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் துணைத் தலைவரும், மாநில ஹேண்ட்பால் அசோசியேஷன் தலைவரும், முன்னாள் போலீஸ் ஐஜியுமான ராமசுப்பிரமணி, ஐபிஎஸ், ஆகியோர் ரொக்கப்பரிசு மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டினர். இப்போட்டிகள் மாணவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.