டீ பாக்கெட்டுக்களுக்குள் மெத்தம்பெடமைன் போதைப்பொருளை பதுக்கிக் கடத்திய பெண் உள்பட 8 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15.8 கிலோ மெத்தம்பெடமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனையடுத்து இம்பாலில் உள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரின் உதவியுடன் சென்னை மண்டல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போதை ஆசாமிகள் ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்யும் நபரிடம் இருந்து ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். மேலும் மியான்மரில் உள்ள தமு என்ற இடத்தில் இருந்து தேநீர் பாக்கெட்டுகளில் மறைத்து மோரேக்கு மெத்தமபெடமைன் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. மோரேயில் இருந்து, இம்பால் கவுகாத்தி சென்னை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவது விசாரணையில் தெரியவந்தது.
சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி ரெய்டில் மொத்தம் 15.8 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மாருதி ஆல்டோ கார், ரொக்கம் ரூ.- 10 லட்சம் மற்றும் போதை ஆசாமிகள் தொடர்பான ரூ. 78 லட்சம் ரொக்கம் உள்ள வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.