சென்னை வேப்­­­பே­ரியில் 108 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உட்­பட 4 பேர் கைது

சென்னை வேப்பேரி பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா கடத்திச்சென்ற  வழக்கில் ஒரு பெண் உட்பட 4 நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­க­ளிடம் இருந்து 108.8 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்­யப்­பட்­டன.
சென்னை பெருநகரில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படையினர் 12 காவல் மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள துணை ஆணையாளர்கள் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு. சரக உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக கண்காணித்து போதை பொருள் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண்  உத்தரவின் பேரில், போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக கண்காணித்து , சென்னை பெருநகரில் போதைப்பொருள் பயன்பாட்டை முழுவதுமாக அகற்றிட சென்னை பெருநகர காவல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் முனைவர் விஜயகுமார் அறிவுரையின்பேரில்,  கீழ்பாக்கம் துணை ஆணையாளர் ஜரீனா பேகம் மேற்பார்வையில் துணை ஆணையர் ANIU தனிப்படை. வேப்பேரி சரக உதவி ஆணையாளர், வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்  குழுவினர் நேற்று (02.06.2025) காலை, வேப்பேரி,  ஜெனரல் காலின்ஸ் ரோடு செங்கல்வராயன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த ஒரு  ஆட்டோ  மற்றும் ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்திலிருந்த மூன்று நபர்களை விசாரிக்க அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகம் அதிகரிக்கவே,  அவர்கள் வாகனத்தில் வைத்திருந்த 2 பெரிய வெள்ளை நிற மூட்டைகளை சோதனை செய்தபோது  அதில் முழுவதுமாக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில் கஞ்சா கடத்தி வந்த  பண்டாரு நாகேஷ்வர ராவ் (30),  கஜபதி (36), தினேஷ் (23) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய எதிரி ரேவதி என்பவரும் சிக்கினார். இவர்களிடமிருந்து 108.8 கிலோ கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1  ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்­சாவை வெளி மாநிலத்திலிருந்து ரயில் மூலம் மேற்படி கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
Comments (0)
Add Comment